தனிமையே! என்னை
தலைநிமிரச் செய்தாய்
தன்னிச்சையாய் வாழ்ந்தேன்
மௌனப் பேச்சினால்
உலகை உணர்த்தினாய்
வெற்றிடத்தை கொண்டே
வேதங்கள் சொன்னாய்
உண்மையில் -- நான்
உன்னை நேசிக்கிறேன்
ஆம் -- நீ
என் கனவுகளின் கோயில்
இதயத்தின் ஓசை -நீ
சோகங்களின் துயரம்
ஆனந்ததின் அரவணைப்பு
ஆனாலும் இங்கே
நம்மை பிரிக்க - அடிக்கடி
சதி அரங்கேருகிறது
ம்ம்.....
பல தருணங்களில்
நான்கு சுவர்களுக்குள் நானா?
எனைச் சுற்றி நான்கு சுவர்களா?
நமக்குள் போட்டி இங்கே,
இலக்கு எனக்கானது?
வெற்றி உனக்கானது
என்றாலும் - என்றென்றும்
தனிமையே! உனக்கு துணையாய்
உறவாட நான்.
Monday, October 13, 2008
தனிமைக்கு துணையாய்.....
அன்புள்ள ஆண்டவருக்கு . . ...
கனத்த இதயத்தோடு
இந்த கடிதத்தை
எழுதுகிறேன்
எங்கே தொடங்க..?
ஏதும் புலப்படாது...
எண்ணத்தின் சிதறல்கள்
இங்கே
நிறையும் குறையும்
உனக்கே சமர்ப்பணம்
இன்பமாய் இருக்கிறேன்
துன்பத்தில்
எனினும் நன்றிகள் கோடி
இந்த சுமைகளை
சுமக்க கற்பித்தாய் - இருப்பினும்
தாங்கிய தோள்களில் - இன்னும்
வடு மறையவில்லை. . . .
ஆம், -- நான்
பாதைகள் இல்லா ஊருக்கு
பயணம் செய்துகொண்டு இருக்கிறேன்
வழி நடத்திச் செல்ல
விழியாய் இருப்பாய் என்கிற
பேராசையுடன்..
ம்ம்ம்.... வேண்டுதலுடன்
முடிக்கிறேன்
இயலுமானால் மகிழ்ச்சி
என்று
மறுமடல் எழுதவும்.
இப்படிக்கு,
நான்.
Subscribe to:
Posts (Atom)