Monday, October 13, 2008

அன்புள்ள ஆண்டவருக்கு . . ...

கனத்த இதயத்தோடு
இந்த கடிதத்தை
எழுதுகிறேன்
எங்கே தொடங்க..?
ஏதும் புலப்படாது...
எண்ணத்தின் சிதறல்கள்
இங்கே
நிறையும் குறையும்
உனக்கே சமர்ப்பணம்
இன்பமாய் இருக்கிறேன்
துன்பத்தில்
எனினும் நன்றிகள் கோடி
இந்த சுமைகளை
சுமக்க கற்பித்தாய் - இருப்பினும்
தாங்கிய தோள்களில் - இன்னும்
வடு மறையவில்லை. . . .
ஆம், -- நான்
பாதைகள் இல்லா ஊருக்கு
பயணம் செய்துகொண்டு இருக்கிறேன்
வழி நடத்திச் செல்ல
விழியாய் இருப்பாய் என்கிற
பேராசையுடன்..
ம்ம்ம்.... வேண்டுதலுடன்
முடிக்கிறேன்
இயலுமானால் மகிழ்ச்சி
என்று
மறுமடல் எழுதவும்.

இப்படிக்கு,
நான்.

No comments: