தனிமையே! என்னை
தலைநிமிரச் செய்தாய்
தன்னிச்சையாய் வாழ்ந்தேன்
மௌனப் பேச்சினால்
உலகை உணர்த்தினாய்
வெற்றிடத்தை கொண்டே
வேதங்கள் சொன்னாய்
உண்மையில் -- நான்
உன்னை நேசிக்கிறேன்
ஆம் -- நீ
என் கனவுகளின் கோயில்
இதயத்தின் ஓசை -நீ
சோகங்களின் துயரம்
ஆனந்ததின் அரவணைப்பு
ஆனாலும் இங்கே
நம்மை பிரிக்க - அடிக்கடி
சதி அரங்கேருகிறது
ம்ம்.....
பல தருணங்களில்
நான்கு சுவர்களுக்குள் நானா?
எனைச் சுற்றி நான்கு சுவர்களா?
நமக்குள் போட்டி இங்கே,
இலக்கு எனக்கானது?
வெற்றி உனக்கானது
என்றாலும் - என்றென்றும்
தனிமையே! உனக்கு துணையாய்
உறவாட நான்.
Monday, October 13, 2008
தனிமைக்கு துணையாய்.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment