Thursday, August 01, 2013

நண்பனின் சித்திரம்

வண்ணங்கள் உருமாறி 
வடிவங்களால் மெருகேறி
விரல்களின் வித்தைகளால்  
சித்திரமாய் உயிர்பெற்று 
விழியோடு கதைபேசி 
நெஞ்சத்தின் நிகழ்வுகளாகி 
நினைவுகளோடு உறைந்த  
உந்தன்  படைப்புகள் 
காலத்துக்கும் 
கலைகளுக்கு சான்று.
நீயோ 
கலைஞனுக்கு சான்று.    

No comments: