வண்ணங்கள் உருமாறி
வடிவங்களால் மெருகேறி
விரல்களின் வித்தைகளால்
சித்திரமாய் உயிர்பெற்று
விழியோடு கதைபேசி
நெஞ்சத்தின் நிகழ்வுகளாகி
நினைவுகளோடு உறைந்த
உந்தன் படைப்புகள்
காலத்துக்கும்
கலைகளுக்கு சான்று.
நீயோ
கலைஞனுக்கு சான்று.
No comments:
Post a Comment