கோழை கடலே!
எங்கள் மீது..
அப்படி என்ன காழ்புணர்ச்சி
இப்படி பொங்கி எழுந்துவிட்டாயே?
உன்னை நம்பியவர்களை
உதாசீனப்படுத்திவிட்டாயே?
இந்த கோர சோதனை எங்களுக்கு எதற்காக?
எங்களின் ஈகை திறனுக்கா?
மானுட அமைதிக்கா?
மத ஒருமை பாட்டிற்க்கா?
உன் பொறுமையின் எல்லைக்கா?
எங்களை கூண்டோடு வேரருக்க நீனைத்ாயே..
இது என்ன நியாயம்?
இதனால் உன் கோரப் பசி தீர்ந்ததோ?
சொல்லில் அடங்கா சோகங்களோடு..
பச்சிளம் பாலர்களும் கேள்விக்குரியாய் -- இங்கே
பட்டினியாய் பதில் தேடுகிறார்கள்.
குடும்பங்களை இழந்தோறும்
குழந்தைகளை இழந்தோறும்
என .. ...... நீ செய்த கொடுமைகள்
கணக்கிலடங்கா .....
மரியாதைக்குறியதுதான் மனிதனுக்கு மரணம்
ஆனால் ..........சுழலும் பூமியே!
கடலோ உீரைக்குடித்தது--
நீயோ உடல்களை உனதாக்கிக்கொண்டாய்.
இது உங்களின் கூட்டுச்சதியோ?
ம்ம்,,,,,,
Wednesday, April 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment